ADDED : செப் 27, 2025 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் போக்குவரத்து விழிப்புணர்வு கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
மதுரை வட்டார போக்குவரத்துத்துறை இணை கமிஷனர்சந்திரசேகர் தலைமை வகித்தார். கல்லுாரி இணைச் செயலாளர் சுப்பிரமணி, கல்லுாரி நிர்வாகி மாரிச்சாமி முன்னிலைவகித்தார்.
தேனிவட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், முதல்வர் மதளைசுந்தரம் பங்கேற்றனர்.
இணை கமிஷனர் பேசுகையில், 'கார் இயக்கும்போது 'ஷீட்' பெல்ட் அணிய வேண்டும். 18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனங்களை இயக்கக்கூடாது,'என்றார்.
மாணவர்கள் பங்கேற்றனர்.