ADDED : ஏப் 23, 2025 07:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி  :  குள்ளப்புரம் வேளாண்  கல்லுாரியின் நான்காம் ஆண்டு மாணவர்கள் கிராம தங்கல் பயிற்சி திட்டத்தின் கீழ், கடமலைக்குண்டு வட்டார கிராமங்களில் களப்பணி ஆற்றி வருகின்றனர்.
ஒருங்கிணைப்பாளர்கள் சுதிர், கவுதம் வழிகாட்டுதலில் மாணவர்கள் ஹரிகிருஷ்ணா, மஹிபாலன், மெய்யழகன், வேல்வீரா, நித்யானந்தன், சமுத்திரவேல், கீர்த்திவாசன், சோமுராஜ், ஆஷீஸ், யோகேஷ்குமார் ஆகியோர் பங்கேற்ற உலக புவி தின விழிப்புணர்வு ஊர்வலம்கடமலைக்குண்டில் நடந்தது.
பஸ் ஸ்டாண்டில் துவங்கிய ஊர்வலம் காளியம்மன் கோயில் வளாகத்தில் நிறைவு பெற்றது.இயற்கை வளங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம்குறித்து  மாணவ, மாணவிகள், பொது மக்களுக்கு விளக்கினர்.

