sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு பாலாபிஷேகம்

/

தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு பாலாபிஷேகம்

தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு பாலாபிஷேகம்

தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு பாலாபிஷேகம்


ADDED : நவ 24, 2024 06:48 AM

Google News

ADDED : நவ 24, 2024 06:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனூர்: சின்னமனூர் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு பாலாபிஷேகம், சங்காபிஷேகம் நடைபெற்றது.சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒருவராக கருதப்படுபவர் கால பைரவர்.

நாயை வாகனமாக கொண்ட இவர் காசி நகரின் காவல் தெய்வமாகவும், சிவாலயங்களிலும் காவல் தெய்வமாக விளங்குபவர்.

தேய்பிறை அஷ்டமி சிவ வழிபாட்டிற்கு உகந்த நாள். சின்னமனூர் சிவகாமியம்மன் உடதுறை பூலாநந்தீஸ்வரர் கோயிலில் நேற்று 192 வது தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தது.

பெண்கள் 108 பால் குடங்களகளில் பால் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, மூலவருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை முதல் யாகபூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.

உற்ஸவர் கால பைரவருக்கு வாழை நாறுகளால் உருவாக்கப்பட்ட மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, உற்ஸவருக்கு 13 வது ஆண்டு மகா கால பைரவர் யாகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் இந்த யாகத்தில் கலந்து கொண்டு கால பைரவரை வழிபட்டனர்.

பிரசாதம், அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பைரவர் வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us