sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேவிகுளம் தாலுகாவில் பந்த் போராட்டக்காரர்கள் தள்ளுமுள்ளு

/

தேவிகுளம் தாலுகாவில் பந்த் போராட்டக்காரர்கள் தள்ளுமுள்ளு

தேவிகுளம் தாலுகாவில் பந்த் போராட்டக்காரர்கள் தள்ளுமுள்ளு

தேவிகுளம் தாலுகாவில் பந்த் போராட்டக்காரர்கள் தள்ளுமுள்ளு


ADDED : ஆக 01, 2025 02:11 AM

Google News

ADDED : ஆக 01, 2025 02:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: தேவிகுளம் தாலுகாவில் நேற்று நடந்த ' பந்த்' தையொட்டி,நேரியமங்கலம் வனத்துறை அலுவலகத்தை நோக்கி ஊர்வலம் நடத்தியவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, கொச்சி இடையே 126 கி.மீ., தூரம் ரூ.1250 கோடி செலவில் ரோடு அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த ரோட்டில் அடிமாலி அருகே வாளரா முதல் நேரியமங்கலம் வரை 14.5 கி.மீ., தூரம் ரோடு கடும் வனத்தின் வழியாக கடந்து செல்கிறது. விதிமுறைகள் மீறி பணிகள் நடப்பதாக கூறி கேரள உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பணிகள் செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.சட்ட ரீதியாக எதிர்கொள்ளவும், போராட்டம் நடத்த வசதியாகவும் பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் உட்படுத்தி தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு குழு எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.

அக்குழு சார்பில் தேவிகுளம் தாலுகாவில் நேற்று ' பந்த்' நடத்தது.

ஆதரவு: அந்த 'பந்து'க்கு காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி ஆதரவு தெரிவித்த நிலையில், கேரள வியாபாரி, விவசாயி ஏகோபன சமிதி எனும் வர்த்தக சங்கம் ஆதரவு அளிக்கவில்லை. இருப்பினும் மூணாறில் மட்டும் காலை 11:00 மணி வரை கடைகள் அடைக்கப்பட்ட நிலையில், அடிமாலி உட்பட பிற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. மூணாறில் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட கடைகள் திறக்கப்பட்டு பஸ், வாகனங்கள் வழக்கம் போல் ஓடின.

' பந்த்' தை முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலையில் ஆறாம் மைல் வனத்துறை அலுவலகம் முதல் நேரியமங்கலம் வனத்துறை அலுவலகம் வரை ஊர்வலம் நடத்தது. அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us