sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேவிகுளம் தாலுகாவில் இன்று 'பந்த்'

/

தேவிகுளம் தாலுகாவில் இன்று 'பந்த்'

தேவிகுளம் தாலுகாவில் இன்று 'பந்த்'

தேவிகுளம் தாலுகாவில் இன்று 'பந்த்'


ADDED : ஜூலை 31, 2025 03:12 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : தேவிகுளம் தாலுகாவில் இன்று (ஜூலை 31) 'பந்த்' நடக்க உள்ள நிலையில், மூணாறில் காலை 11:00 மணி வரை கடைகள் அடைக்க வர்த்தக சங்கம் முடிவு செய்தது.

கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, கொச்சி இடையே 126 கி.மீ., தூரம் ரூ.1250 கோடி செலவில் ரோடு அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த ரோட்டில் அடிமாலி அருகே வாளாரா முதல் நேரியமங்கலம் வரை 14.5 கி.மீ., தூரம் ரோடு பணிகள் விதிமுறை மீறி நடப்பதாக புகார் எழுந்த நிலையில், அப்பகுதியில் பணிகள் செய்ய கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

அதற்கு எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு குழு எனும் அமைப்பு சார்பில் இன்று தேவிகுளம் தாலுகாவில் ' பந்த்' நடக்கிறது.

அதற்கு கேரளா வியாபாரி, விவசாயி ஏகோபன சமிதி எனும் வர்த்தக சங்கம் ஆதரவு இல்லை என முக்கியஸ்தர்கள் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி ஆதரவு தெரிவித்ததால் கடைகளை அடைப்பது தொடர்பாக வர்த்தகர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் மூணாறில் காலை 11:00 மணி வரை மட்டும் கடைகளை அடைக்க வர்த்தக சங்கம் முடிவு செய்தது.






      Dinamalar
      Follow us