/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தடை செய்யப்பட்ட பாலிதீன், பிளாஸ்டிக் பயன்பாடு தாராளம்! நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம்
/
தடை செய்யப்பட்ட பாலிதீன், பிளாஸ்டிக் பயன்பாடு தாராளம்! நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம்
தடை செய்யப்பட்ட பாலிதீன், பிளாஸ்டிக் பயன்பாடு தாராளம்! நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம்
தடை செய்யப்பட்ட பாலிதீன், பிளாஸ்டிக் பயன்பாடு தாராளம்! நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம்
ADDED : மே 19, 2024 11:59 PM
நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை நகராட்சி பகுதியில் பயன்படுத்தக் கூடாது என அரசால் தடை விதிக்கப்பட்டது. பின் போடி, தேனி, கம்பம் உள்ளிட்ட நகராட்சிகளில் 15 ஆண்டுகளுக்கு முன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஊர்வலங்கள், விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டன.
வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் ரோட்டோர கடை வைத்திருப்பவர்கள் பாலிதீன் பைகளை பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டன.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் போடி நகராட்சியில் பாலிதீன், பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என தடை விக்கப்பட்டது. மீறும் நபர்களுக்கு முன்னாள் நகராட்சி கமிஷனர் சரவணகுமார் ரூ. ஆயிரம் வரை அபராதம் விதித்தார். கடைகள், ஓட்டல்கள், டாஸ்மாக் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் சோதனை நடத்தியதில் ரூ. பல லட்சம் மதிப்பு உள்ள பிளாஸ்டிக் கேரி பைகள், டீ கப், காலாவதியான குடிநீர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனால் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத வகையில் மாவட்டத்தில் முன்னோடி நகராட்சியாக போடி நகராட்சி செயல்பட்டு வந்தது.
இது போல மற்ற நகராட்சிகளும் துரிதமாக செயல்பட்டன. அதன் பின் வந்த கமிஷனர்களால் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
தற்போது இதனை நடைமுறைப் படுத்துவதில் நகராட்சி நிர்வாகங்கள் மெத்தனம் காட்டி வருவதால் பாலிதீன், பிளாஸ்டிக் பயன்பாடு தாராளமாக விற்பனையாகி, பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு மக்களுக்கு சுகாதாரகேடு ஏற்படும் நிலை உள்ளது.

