/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊராட்சி துாய்மை பணிக்கு வழங்கிய பேட்டரி வாகனங்கள் வீணாகிறது; ஒன்றியங்களில் வெயில்,மழையில் நிறுத்தி சேதமாகும் அவலம்
/
ஊராட்சி துாய்மை பணிக்கு வழங்கிய பேட்டரி வாகனங்கள் வீணாகிறது; ஒன்றியங்களில் வெயில்,மழையில் நிறுத்தி சேதமாகும் அவலம்
ஊராட்சி துாய்மை பணிக்கு வழங்கிய பேட்டரி வாகனங்கள் வீணாகிறது; ஒன்றியங்களில் வெயில்,மழையில் நிறுத்தி சேதமாகும் அவலம்
ஊராட்சி துாய்மை பணிக்கு வழங்கிய பேட்டரி வாகனங்கள் வீணாகிறது; ஒன்றியங்களில் வெயில்,மழையில் நிறுத்தி சேதமாகும் அவலம்
ADDED : ஏப் 13, 2025 05:18 AM

தேனி: மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் துாய்மை பணிக்காக வழங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் பல மாதங்களாக ஒன்றிய அலுவலகங்களில் திறந்த வெளியில் நிறுத்தி வெயில், மழையில் நனைந்து சேதமடைந்து வருகிறது.
மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் துாய்மை பணிக்காக துாய்மை பாரத இயக்கம் 2023-2024 திட்டத்தில் தலா ரூ.2.52லட்சம் மதிப்பிலான 103 பேட்டரி வாகனங்கள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த வாகனங்கள் ஊராட்சி மக்கள் தொகைக்கு ஏற்ப ஒன்று முதல் 4 வாகனங்கள் வழங்கப்படும்.இந்த வாகனங்கள்இரு மாதங்களுக்கு முன் அந்தந்த ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்களில்வழங்கப்பட்டது.இவற்றைபிப்.,12ல் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியசாமி துவக்கி வைத்தார். ஆனால், இதுவரைசம்மந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு வழங்கிபயன்படுத் வில்லை.
தேனி ஒன்றிய அலுவலகத்தில்19 பேட்டரி வாகனங்கள்திறந்த வெளியில்நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதே போல் பெரியகுளம், கம்பம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி ஒன்றியங்களில் பேட்டரி வாகனங்கள் ஆங்காங்கே திறந்த வெளியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் பேட்டரி இதயம் போன்றது. பேட்டரிகளை குறைந்தது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது சார்ஜ் ஏற்ற வேண்டும். முறையாக பராமரிக்கவில்லை என்றால் பேட்டரி பழுதாகி விடும் என்கின்றனர்.
பேட்டரி பழுதானால், அந்த வாகனத்தை காயிலாங் கடைக்கு போட வேண்டிய நிலை ஏற்படும். இந்நிலையால் மழை, வெயிலில் நனைந்து பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பேசேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆர்.சி., புத்தகம் வரவில்லைஇது குறித்துதேனிஅதிகாரி ஒருவர்கூறுகையில், 'தேனி ஒன்றியத்திற்கு 28 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்த ஊராட்சிக்கு எத்தனை வாகனங்கள் என பிரிக்கப்பட்டுள்ளது.வாகனத்திற்கான ஆர்.சி., புத்தகம் வராததால் ஊராட்சிகளுக்கு வழங்கவில்லை. மேலும் ஊராட்சிகளுக்கு இந்த திட்டத்திற்கான நிதி இன்னும் ஒதுக்கவில்லை. இந்த வாரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார். இதே நிலைதான் அனைத்து ஒன்றியங்களிலும் நிலவுகிறது. எனவே கலெக்டர் கவனம் செலுத்தி பயன்இன்றி உள்ள பேட்டரி வாகனங்களை ஊராட்சிகளுக்கு வழங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.