sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தகிக்கும் கோடை வெயிலில் கருகும் வெற்றிலை கொடிகள்

/

தகிக்கும் கோடை வெயிலில் கருகும் வெற்றிலை கொடிகள்

தகிக்கும் கோடை வெயிலில் கருகும் வெற்றிலை கொடிகள்

தகிக்கும் கோடை வெயிலில் கருகும் வெற்றிலை கொடிகள்


ADDED : ஏப் 23, 2025 05:47 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனூர் : தகிக்கும் கோடை வெயிலில் வெற்றிலை கொடிகள் தாக்கு பிடிக்க முடியாமல் கருகி வருகிறது. வெற்றிலையின் மேல் கரும் புள்ளிகள் ஏற்பட்டு வீணாகி வருகிறது.

மாவட்டத்தில் சின்னமனூர், பெரியகுளம் வட்டாரங்களில் மட்டுமே வெற்றிலை சாகுபடியாகிறது. வெள்ளை வெற்றிலை பெரியகுளத்திலும், கருப்பு வெற்றிலை சின்னமனூரிலும் சாகுபடியாகிறது.

கடந்த சில வாரங்களாக கோடை வெயில் தகிக்கிறது. இதனால் சின்னமனூரில் கொடிக் கால்களில் வெற்றிலை கொடிகள் கருகி வருகிறது.

போர் தண்ணீர் பாய்ச்சிய போதும், அதிக வெப்பம், இடையிடையே பெய்யும் லேசான மழை காரணமாக மண் சூடாகி, கொடிகள் கருகி வருகிறது. மேலும் வெற்றிலையின் மீது கறுப்பு புள்ளிகள் காணப்படுகிறது.

இதனால் வெற்றிலையை பயன்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது.

வெற்றிலை கொடிக்கால்களில் எழுந்துள்ள இந்த சூழல் காரணமாக விவசாயிகள் கவலையில் உள்ளனர். விலையும் வெள்ளை வெற்றிலை கிலோ ரூ.300 ல் இருந்து ரூ.280 ஆகவும், கறுப்பு ரூ.220 ல் இருந்து 190 ஆகவும் விலை குறைந்து விட்டது.

கொடிக் கால் விவசாயி ரவி கூறுகையில்,

இடையிடையே லேசாக மழை பெய்து, தற்போது அதிக வெப்பம் நிலவுவதால் மண் சூடாகி வெற்றிலை கொடிகள் கருகியுள்ளது. இதனால் வெற்றிலை விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். மகசூல் குறையவும் வாய்ப்பு உள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us