sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பா.ஜ., ரோடு மறியல்: 115 பேர் கைது

/

பா.ஜ., ரோடு மறியல்: 115 பேர் கைது

பா.ஜ., ரோடு மறியல்: 115 பேர் கைது

பா.ஜ., ரோடு மறியல்: 115 பேர் கைது


ADDED : மார் 18, 2025 05:46 AM

Google News

ADDED : மார் 18, 2025 05:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தமிழகத்தில் அமலாக்கதுறை சோதனையில் டாஸ்மாக் மூலம் ரூ.ஆயிரம் கோடி முறைக்கேடு நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நேற்று சென்னையில் டாஸ்மாக் அலுவலகம் முன் அண்ணாமலை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் அண்ணாமலை மற்றும் பா.ஜ., தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதினை கண்டித்து தேனி கலெக்டர் அலுவலகம் முன் பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் கட்சியினர் ரோடு மறியலில் ஈடுபட்டனர். முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டியன், மாவட்ட செயலாளர் மலைச்சாமி உள்ளிட்டோர் மறியலில் பங்கேற்றனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 52 பேரை போலீசார் கைது செய்தனர்.

போடி: பா.ஜ., தலைவர் சித்ராதேவி தலைமையில் ரோடு மறியலில் ஈடுபட முயன்ற நகர செயலாளர் குருநாதன், பொதுச் செயலாளர் சரவணன், முன்னாள் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் உட்பட 16 பேரை போடி டவுன் போலீசார் கைது செய்தனர்.

ஆண்டிபட்டி: பா.ஜ., நகர் தலைவர் மனோஜ்குமார் தலைமையில் ஆண்டிபட்டி வைகை ரோடு சந்திப்பில் மறியல் செய்தனர்.

மறியலில் ஈடுபட்ட பா.ஜ., நிர்வாகிகள் ராமச்சந்திரன், கார்த்திக், நாகேந்திரன், சுரேஷ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

கம்பம்: கம்பத்தில் 24 பேர், உத்தமபாளையத்தில் 4 பேர், சின்னமனூரில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us