ADDED : டிச 11, 2024 06:32 AM
அ நிறம் | அளவு
பெரியகுளம், : பெரியகுளம் கீழ வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட செல்லா காலனி மலைவாழ் மக்களுக்கு தேனி மாவட்ட பாவை பவுண்டேஷன் சார்பில் போர்வை வழங்கும் விழா நடந்தது.
கீழ வடகரை ஊராட்சி தலைவர் செல்வராணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராஜசேகர், சமூக ஆர்வலர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். 50 பேருக்கு போர்வை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து செய்திருந்தார்.-
