sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அரசு பள்ளியில் வாட்ச்மேன் உதவியுடன் புத்தகங்கள் திருட்டு

/

அரசு பள்ளியில் வாட்ச்மேன் உதவியுடன் புத்தகங்கள் திருட்டு

அரசு பள்ளியில் வாட்ச்மேன் உதவியுடன் புத்தகங்கள் திருட்டு

அரசு பள்ளியில் வாட்ச்மேன் உதவியுடன் புத்தகங்கள் திருட்டு


ADDED : செப் 28, 2025 03:31 AM

Google News

ADDED : செப் 28, 2025 03:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இரவில் தற்காலிக வாட்ச்மேன் மாரிமுத்து உதவியுடன் பண்டல் பண்டலாக புத்தகங்கள் திருடுபோனது.

தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவில் இங்குள்ள தற்காலிக வாட்ச்மேன் மாரிமுத்து உதவியுடன் மாணவர்களுக்கு வழங்காமல் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த புத்தக பண்டல்களை திருடி லோடு வேனில் ஏற்றினர். புத்தக திருட்டிற்கு ஓரிரு ஆசிரியர் உடந்தையாக இருந்துள்ளனர். இதனையறிந்த பொதுமக்கள் சிலர் அலைபேசியில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலானது.

பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டியன் கூறுகையில், 'புத்தகங்கள் திருட்டு குறித்து தேவதானப்பட்டி போலீசில் புகார் செய்துள்ளேன். யார் எடுத்து சென்றனர் என்ற விபரங்கள் சிசிடிவி கேமராவில் உள்ள பதிவுகளை பார்த்து வருகிறோம்,' என்றார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். போலீசார் திருட்டில் ஈடுபட்டவர்கள் விபரங்களை ரகசியம் காத்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us