ADDED : ஏப் 04, 2025 05:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பழைய ஓய்திய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா ஜியோ சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் குபேந்திர செல்வம் தலைமை வகித்தார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சரவணமுத்து முன்னிலை வகித்தார். பிற சங்க நிர்வாகிகள் ரவி, சென்னமராஜ், ராமதாஸ், ராஜன், சிவக்குமார், மஹபூப்பீவி, சசிக்குமார், உடையாளி, முகமது ஆசிக், பாண்டித்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

