ADDED : டிச 03, 2024 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: டி.பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராம்குமார் 30, விவசாயம் செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன் டி.சுப்புலாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பி உள்ளார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த ரேடியோ, பித்தளை பாத்திரங்கள் உட்பட ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போயிருந்தது.
இது குறித்து ராம்குமார் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.