/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடியில் வீட்டை உடைத்து பணம் திருட்டு
/
போடியில் வீட்டை உடைத்து பணம் திருட்டு
ADDED : செப் 19, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி சூர்யா நகரை சேர்ந்தவர் சாந்தம்மாள் 51. இவர் சுப்புராஜ் நகரில் வீட்டை வாடகைக்கு எடுத்து ஏலக்காய் கடை நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் வேலைக்கு வந்த நபர்களுக்கு சம்பளம் கொடுத்து வீட்டை பூட்டிய பின் வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று காலையில் திரும்ப வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.ஒரு லட்சத்தி 95 ஆயிரம் திருடு போனது தெரிந்தது.
போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.