ADDED : ஜூலை 05, 2025 12:21 AM
உத்தமபாளையம்; சுருளிப்பட்டியில் பூட்டியிருந்த வீட்டில் 7 பவுன் தங்க நகை, ரூ.2.50 லட்சம் திருடுபோனது.
சுருளிப்பட்டி தெற்குத் தெருவில் வசிக்கும் அமரன், மனைவியுடன் காலையில் வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார். மாலை வீடு திரும்பியபோது, வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த ரூ.2.50 லட்சம் ரொக்கம், 7 பவுன் தங்க செயின் திருடு போனது. அமரன் புகாரில் ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
* ராயப்பன்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்தவர் மகாராஜன் 70, இவர் செங்கல் காளவாசல் வைத்துள்ளார். தனது வீடு பராமரிப்பு செய்வதற்காக வீட்டில் இருந்த பாத்திரங்களை எடுத்து , கல்லறைக்கு எதிரில் உள்ள பழைய ஹாஸ்டலில் வைத்துள்ளார். வீட்டு வேலை முடிந்தவுடன் பொருள்களை எடுக்க வந்த மூன்று அண்டா , பானை , குடம் மொத்த பாத்திரங்களையும் காணவில்லை.புகாரில் ராயப்பன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.