sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

டூவீலர் மோதிய விபத்தில் எரிந்த பஸ்; மெக்கானிக் உடல் கருகி பலி

/

டூவீலர் மோதிய விபத்தில் எரிந்த பஸ்; மெக்கானிக் உடல் கருகி பலி

டூவீலர் மோதிய விபத்தில் எரிந்த பஸ்; மெக்கானிக் உடல் கருகி பலி

டூவீலர் மோதிய விபத்தில் எரிந்த பஸ்; மெக்கானிக் உடல் கருகி பலி


ADDED : அக் 06, 2024 11:22 PM

Google News

ADDED : அக் 06, 2024 11:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி மாவட்டம் கம்பம் பைபாஸ் ரோடு போடேந்திரம் விலக்கு அருகே ரோட்டை கடந்து சென்ற டூவீலர் மீது தனியார் பஸ் மோதியது. இதில் டூவீலரின் பெட்ரோல் டேங்க்கில் பற்றிய தீ பஸ்சிற்கு பரவி எலும்புகூடானது. டூவீலரில் சென்ற டி.வி., மெக்கானிக் அரசாங்கம் 57, பஸ் கீழ் பகுதியில் சிக்கி உடல் கருகி பலியானார்.

தேனி எம்.ஜி.ஆர்., நகர் அரசாங்கத்துக்கு கூழையனுார் அய்யநாதபுரத்தில் தென்னந்தோப்பு உள்ளது. நேற்று காலை டூவீலரில் தோட்டத்திற்கு சென்று விட்டு தேனி திரும்பினார். தேனியிலிருந்து கம்பம் சென்ற தனியார் பஸ்சை போடேந்திரபுரம் விக்னேஷ் 32, ஓட்டினார். போடேந்திரபுரம் விலக்கில் சென்ற பஸ் டூவீலரில் மோதியது.

இதில் அரசாங்கம் டூ வீலருடன் பஸ் முன் சக்கர பகுதியில் சிக்கினார். பஸ் சிறிது வினாடிகள் சென்று நிறுத்தப்பட்டது. இழுத்து செல்லப்பட்டதில் டூவீலரில் தீப்பற்றியது. இந்த தீ பஸ் முன்பகுதியில் பரவியது. பஸ்சில் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் இறங்கி ஓடினர். மெக்கானிக் உடலை மீட்பதற்குள் பஸ் முழுதும் தீப்பற்றி எரிந்தது.

டி.எஸ்.பி., சுரேஷ், தீயணைப்புத்துறை மாவட்ட உதவி அலுவலர் குமரேசன் தலைமையில் போலீசார், தீயணைப்புத்துறையினர் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பஸ் டீசல் டேங்க் பகுதியில் தீப்பற்றி எரிந்ததால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டது. பஸ் முழுதும் எரிந்து முடிந்த பின் கருகிய நிலையில் மீட்கப்பட்ட அரசாங்கத்தின் உடல் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். விபத்தால் திண்டுக்கல் - குமுளி ரோட்டில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு முத்துதேவன்பட்டி வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.






      Dinamalar
      Follow us