sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அஞ்சல் காப்பீட்டு பாலிசிகளில் அலைபேசி எண் இணைக்க முகாம்

/

அஞ்சல் காப்பீட்டு பாலிசிகளில் அலைபேசி எண் இணைக்க முகாம்

அஞ்சல் காப்பீட்டு பாலிசிகளில் அலைபேசி எண் இணைக்க முகாம்

அஞ்சல் காப்பீட்டு பாலிசிகளில் அலைபேசி எண் இணைக்க முகாம்


ADDED : அக் 25, 2025 04:53 AM

Google News

ADDED : அக் 25, 2025 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் குமரன் கூறியதாவது: தபால்துறை ஆயுள் காப்பீட்டு பாலிசிகளில் இதுவரை அலைபேசி எண், இமெயில் ஐ.டி.,யை இணைத்திடாத பாலிசிதாரர் தங்கள் அலைபேசி எண், இமெயில்ஐ.டி.யை இணைத்துக் கொள்ள சிறப்பு முகாம்கள் அக்., 27 முதல் டிச.15 வரை அனைத்து தபால் நிலையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன.

இது முற்றிலும் இலவச சேவை. அலைபேசி எண், இமெயின் ஐ.டி.,யை இணைப்பதன் மூலம் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் தங்கள் பாலிசிகளுக்கு பிரிமியம் செலுத்தலாம். பாலிசியின் மீது கடன் பெறுதல், முதிர்ச்சி தேதி, சரண்டர் செய்தல் ஆகிய பரிவர்த்தனை நடந்தால் அதன் விபரங்கள் பாலிசிதாரர்கள் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணுக்கு உடனுக்குடன் குறுந்தகவல் அனுப்பப்படும்.

இதனால் பாதுகாப்பான, உடனடி பரிவர்த்தனை உறுதிசெய்யப்படுகிறது.

எனவே, இதுவரை அலைபேசி எண், இமெயில் ஐ.டி., இணைக்காத பாலிசிதாரர்கள் அருகில் உள்ள அஞ்சல் அலு வலகங்களுக்கு சென்று அப்டேட் செய்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us