sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மகனை காப்பாற்றிய தந்தை கொலை; 7 பேர் மீது வழக்கு: ஒருவர் கைது

/

மகனை காப்பாற்றிய தந்தை கொலை; 7 பேர் மீது வழக்கு: ஒருவர் கைது

மகனை காப்பாற்றிய தந்தை கொலை; 7 பேர் மீது வழக்கு: ஒருவர் கைது

மகனை காப்பாற்றிய தந்தை கொலை; 7 பேர் மீது வழக்கு: ஒருவர் கைது


ADDED : நவ 18, 2024 07:52 AM

Google News

ADDED : நவ 18, 2024 07:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி, : தேவதானப்பட்டியில் மகன் மாரிமுத்துவை கொலை செய்ய திட்டமிட்ட கும்பல் மகனை தப்பிக்கவிட்ட தந்தை முருகனை கொலை செய்தனர். தேவதானப்பட்டி போலீசார் 7 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, ஒருவரை கைது செய்தனர்.

தேவதானப்பட்டி தெற்குதெரு கக்கன்ஜி காலனி முருகன் 60. இவரது மகன் மாரிமுத்து 30. முன் விரோதம் காரணமாக நேற்று முன்தினம் சுடுகாட்டு பகுதியில் இதே தெருவைச் சேர்ந்த சந்தனக்குமார், கரண்குமார், பெரியசாமி, முத்துமணி, சபரிவாசன், விஜயகுமார், ராஜ்குமார் ஆகிய 7 பேரும் மாரிமுத்துவை தாக்கினர்.

இந்த விபரம் அறிந்த முருகன், மகனிடம் தகராறு செய்தவர்களை எச்சரித்து, மாரிமுத்துவை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்தார். சிறிது நேரம் கழித்து சுடுகாட்டு பகுதியில் டீ குடிக்க முருகன் சென்றார்.

அங்கு வந்த 7 பேரும், உன் மகன் மாரிமுத்துவை கொலை செய்ய திட்டமிட்டு இருந்தோம். நீ தப்பிக்க விட்டதால் உன்னை கொல்லாமல் விடமாட்டோம் என முருகனை கைகளால் தாக்கி, கீழே தள்ளிவிட்டு, காலால் உதைத்து, கற்களால் எறிந்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே முருகன் இறந்தார்.

தேவதானப்பட்டி போலீசார் சந்தனக்குமார் உட்பட 7 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, பெரியசாமியை கைது செய்து, தலைமறைவான நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us