ADDED : மார் 19, 2024 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : தேவாரம் மல்லிங்கர் கோயில் தெருவை சேர்ந்தவர் அருண்பாண்டி 24 . இவர் சங்கராபுரம் டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வருகிறார். மல்லிங்காபுரத்தை சேர்ந்த சத்தியசீலன் 42. துாத்துக்குடி சிவகுண்டலம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி 48. இருவரும் மது குடித்து விட்டு கடையில் தின்பண்டங்கள் வாங்கியுள்ளனர்.
அருண்பாண்டியன் பணம் கேட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த இருவரும் அருண்பாண்டியனை அடித்து காயம் ஏற்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர்.போடி தாலுகா போலீசார் சத்தியசீலன், மாடசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

