sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மறியல் 5 பேர் மீது வழக்கு

/

தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மறியல் 5 பேர் மீது வழக்கு

தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மறியல் 5 பேர் மீது வழக்கு

தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மறியல் 5 பேர் மீது வழக்கு


ADDED : செப் 02, 2025 03:30 AM

Google News

ADDED : செப் 02, 2025 03:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி : போடி நாகலாபுரம் அருகே கெஞ்சம்பட்டியில் வசிப்பவர் கார்த்திக் 28. இவர் நாகலாபுரம் காலனி மெயின் ரோட்டில் வசிக்கும் கவிதா 32. விற்கு ரூ.10 ஆயிரம் கடன் கொடுத்துள்ளார். கார்த்திக் பலமுறை கடன் கேட்டும் கவிதா பணம் தரவில்லை. நேற்று முன்தினம் கார்த்திக், இவரது தந்தை வனராஜ் 58, கொடுத்த பணத்தை கவிதாவிடம் கேட்க சென்றனர். அப்போது கவிதா, உறவினர்கள் காளியப்பன், காமாட்சி, பாண்டியம்மாள், மீனாட்சி ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து கார்த்திக், வனராஜ்யை செருப்பால் அடித்து தாக்கி,மருந்து குடித்து சாகுமாறு திட்டி உள்ளனர். இதனால் மனம் உடைந்த வனராஜ் விஷம் குடித்து இறந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வனராஜ் உறவினர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று முன்தினம் இரவு 11:00 மணி அளவில் இறந்த சடலத்துடன் தேவாரம் மெயின் ரோட்டில் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போடி டி.எஸ்.பி., சுனில், தாலுகா இன்ஸ்பெக்டர் உலகநாதன் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.

வனராஜ் மனைவி தங்கமுடி புகாரில் போடி தாலுகா போலீசார் கவிதா, காளியப்பன் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us