/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நகராட்சி துணை தலைவர் புகாரில் 9 பேர் மீது வழக்கு
/
நகராட்சி துணை தலைவர் புகாரில் 9 பேர் மீது வழக்கு
ADDED : அக் 26, 2024 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: கம்பத்தில் சூர்யா சில்க்ஸ் மற்றும் ரெடிமேட்ஸ் கடை நிர்வாகிகளாக மாஜி கம்பம் தி.மு.க. நகர் செயலாளர் செல்வக்குமார் என்பவரும் , அவரது மனைவியும், தற்போதைய நகராட்சி துணை தலைவருமான சுனோதா இருந்தனர்.
இந்த கடையின் முதலீட்டாளர்கள் தினகரன், ரத்தின குமார், கற்பகராஜ், முருகேசன், சத்யன், ஜெனிதா, ரவிஸ்வரன், பிரவீன், ராஜேஷ் குமார் ஆகியோர் தன்னையும், தனது கணவரையும் அவதூறு செய்ததாக கம்பம் தெற்கு போலீசில் அக் 23 ல் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.