sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.49 லட்சம் மோசடி தந்தை, மகன் மீது வழக்கு

/

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.49 லட்சம் மோசடி தந்தை, மகன் மீது வழக்கு

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.49 லட்சம் மோசடி தந்தை, மகன் மீது வழக்கு

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.49 லட்சம் மோசடி தந்தை, மகன் மீது வழக்கு


ADDED : ஜூன் 30, 2025 02:45 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி மாவட்டத்தை சேர்ந்த சிலரிடம் வி.ஏ.ஓ., ஆய்வக உதவியாளர், சார்பதிவாளர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.49 லட்சம் மோசடி செய்த மதுரை திருமங்கலம் பகத்சிங் தெரு திருவள்ளுவன், மகன் சரவணக்குமார் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கம்பம் குட்டியபிள்ளை தெரு வழக்கறிஞர் ராஜ்குமார். இவரது நண்பர் ஜீவானந்தம் மூலம் 2014ல் திருமங்கலம் சரவணக்குமார் அறிமுகமானார். அவர், சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரிவதாகவும், சிலரிடம் பணம் பெற்று வி.ஏ.ஓ., மருத்துவ துறையில் ஆய்வக உதவியாளர் வேலை வாங்கி தந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ராஜ்குமார் பணம் வழங்கினால், சார்பதிவாளர் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்தார். நண்பர்களுக்கு பணம் வழங்கினால் அவர்களுக்கும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார். இதனை நம்பிய ராஜ்குமார், அவருக்கும், உறவினர்கள், நண்பர்கள் என 5 பேருக்கு அரசு வேலை கேட்டு ரூ. 49 லட்சத்தை வழங்கினார்.

சரவணக்குமார், தந்தை திருவள்ளுவன் பணி ஆணை வழங்குவதாக கூறி காலம் தாழ்த்தி வந்தனர். தான் ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்த ராஜ்குமார் பணத்தை திருப்பி கேட்டார்.

ஆனால் இருவரும் கொலைமிரட்டல் விடுத்தனர். ராஜ்குமார் தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் அளித்தார். எஸ்.பி., உத்தரவில் சரவணக்குமார், திருவள்ளுவன் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us