/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அண்ணியை தாக்கிய கொழுந்தன் மீது வழக்கு
/
அண்ணியை தாக்கிய கொழுந்தன் மீது வழக்கு
ADDED : மே 18, 2025 03:25 AM
பெரியகுளம்: கோவை பேரூர் சிறுவானி பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் மனைவி முத்துலட்சுமி 70. இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். முத்துராஜ் 3 ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.
கோவையில் மகள் சுதா வீட்டில் தங்கியிருந்தவர் முத்துலட்சுமி, பெரியகுளம் வடகரை அரண்மனை தெருவில் தனது கணவரின் வீட்டில் தங்குவதற்கு 3 மகள்களுடன் வந்து வீட்டினை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த கொழுந்தனார் (கணவரின் தம்பி) கனகராஜ், எங்கள் வீட்டில் உங்களுக்கு என்ன வேலை என அவதூறாக பேசியுள்ளார். அதற்கு முத்துலட்சுமி,' எனது கணவர் வீடு தானே,' என்றார்.
கனகராஜ் மற்றும் மகன் வெங்கடேஷ், முத்துலட்சுமியை அடித்து வெளியேற்றினார். தடுக்க வந்த சுதாவை அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரில் வடகரை போலீசார் தந்தை, மகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.-