/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கொலை மிரட்டல் ஒருவர் மீது வழக்கு
/
கொலை மிரட்டல் ஒருவர் மீது வழக்கு
ADDED : நவ 21, 2025 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி மதுரைவீரன் தெருவை சேர்ந்தவர் வினோத்பாபு 36. இவர் ஒரு நாளிதழில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் போடி குலாலர்பாளையம் தெருவை சேர்ந்த மணிமாறன் 52, என்பவருக்கும் முன் விரோதம் ஏற்பட்டு வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் வழக்கை வாபஸ் பெறுமாறு வினோத்பாபுவை தகாத வார்த்தையால் பேசி, மது பாட்டிலை காண்பித்து கொலை செய்து விடுவதாக மணிமாறன் மிரட்டி உள்ளார். வினோத்குமார் புகாரில் போடி டவுன் போலீசார் மணிமாறன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

