ADDED : நவ 20, 2025 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி சாமித்தோட்டம் இந்திரா நகரில் வசிப்பவர் உமாராணி 48. தினசரி மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்துள்ளார்.
இவரது மகன் இதே பகுதியை சேர்ந்த முருகனின் மகன் பிரபாகரனை அடித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன், இவரது மனைவி பிச்சை, மகள் சித்ரா மூவரும் சேர்ந்து உமாராணியிடம் தகராறு செய்து, அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். உமாராணி புகாரில் போடி டவுன் போலீசார் முருகன், பிச்சை உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

