sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குறைந்த விலையில் தங்க நாணயம் என கூறி ரூ.5.50லட்சம் மோசடி மூவர் மீது வழக்கு

/

குறைந்த விலையில் தங்க நாணயம் என கூறி ரூ.5.50லட்சம் மோசடி மூவர் மீது வழக்கு

குறைந்த விலையில் தங்க நாணயம் என கூறி ரூ.5.50லட்சம் மோசடி மூவர் மீது வழக்கு

குறைந்த விலையில் தங்க நாணயம் என கூறி ரூ.5.50லட்சம் மோசடி மூவர் மீது வழக்கு


ADDED : மார் 20, 2025 02:27 AM

Google News

ADDED : மார் 20, 2025 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:தேனி மாரியம்மன்கோவில்பட்டியை சேர்ந்த ஈஸ்வரனிடம் குறைந்த விலையில் தங்க நாணயம் தருவதாக கூறி ரூ. 5.50 லட்சம் மோசடி செய்த பொம்மையகவுண்டன்பட்டி ஆண்டவர், சிவா, சிவனேசன் ஆகிய மூவர் மீது அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

ஈஸ்வரன் 32, டிராவல்ஸ் நிறுவனம் நடத்துகிறார். இவரது உறவினர் விஷால். இவரை அலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் குறைந்த விலையில் தங்கநாணயம் வழங்குவதாகவும் ரூ. 50 ஆயிரத்துடன் போடி பை பாஸ் ரோட்டிற்கு வருமாறும் கூறினார். இதனை நம்பி அங்கு சென்ற ஈஸ்வரன், விஷாலிடம் பணத்தை பெற்று 700 மி.கிராம் எடையுள்ள இரு தங்க நாணயத்தை ஆண்டவர், சிவா, சிவனேசன் கொடுத்தனர். மேலும் ரூ. 5 லட்சம் வழங்கினால் 250 தங்க நாணயங்கள் வழங்குவதாக தெரிவித்தனர்.

இதனை நம்பி இருவரும் கர்நாடக மாநிலம் ஹரப்பணஹள்ளி சென்றனர். அங்கு இருவரிடமுமிருந்து ரூ. 5.5 லட்சத்தை பறித்து கொண்டு, கொலை மிரட்டல் விடுத்து ஆண்டவர் உள்ளிட்ட மூவரும் தப்பினர். ஈஸ்வரன் புகாரில் மூவர் மீதும் அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் குறைந்த விலைக்கு நாணயம் வழங்குவதாக கூறி ரூ.7 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் ஆண்டவர் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us