/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அலைபேசி திருடிய இருவர் மீது வழக்கு
/
அலைபேசி திருடிய இருவர் மீது வழக்கு
ADDED : டிச 29, 2024 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் வடகரை வடக்கு பூந்தோட்டத்தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் 43. பாலசுப்பிரமணியர் கோயில் வராகநதி படித்துறையில் பேக்கின் மேல் அலைபேசி, ரூ.4 ஆயிரம் வைத்துவிட்டு ஆற்றில் கால் கழுவிக்கொண்டிருந்தார்.
அப்போது அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்த சூரியா, இவரது நண்பர் பிரகாஷ் இருவரும் அலைபேசி, ரூ.4 ஆயிரத்தை திருடிக்கொண்டு ஓடினர். தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.--