ADDED : ஜன 10, 2025 05:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி நகராட்சி அருகே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஊர்வலம் நடந்தது. மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் பிரசாத்குமார் தலைமை வகித்தார்.
மாநில ஆலோசகர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முகமது ஆசிக், மாவட்ட நிதிகாப்பாளர் காமேஷ்வரன், அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் சென்னமராஜ், மாவட்ட தலைவர் உடையாளி, தேசிய ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார், பிற சங்க நிர்வாகிகள் தங்கமீனா, சின்னசாமி உள்ளிட்டோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.ஊர்வலம் பழைய ஜி.எச்.,ரோடு சந்திப்பு வரை நடந்தது.

