ADDED : ஏப் 27, 2025 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் 39. அலைபேசி டவர் அமைக்கும் தனியார் நிறுவனத்தில் நிலம் கையகப்படுத்தும் அலுவலராக உள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் அருணகிரி என்பவருக்கு சொந்தமான இடத்தில் 60 மீட்டர் உயர அலைபேசி டவர் அமைத்து வாடகை செலுத்தி வந்துள்ளார். டவர் செயல்பாட்டிற்கு இருந்த ரூ.31 லட்சம் மதிப்பிலான பேட்டரி, மின் சாதன பொருட்கள் திருடுபோனதாக இங்கு டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.