sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மாரியம்மன் கோயில் திருவிழாவில் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் சுவாமி வேடமிட்டு அசத்திய குழந்தைகள்

/

மாரியம்மன் கோயில் திருவிழாவில் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் சுவாமி வேடமிட்டு அசத்திய குழந்தைகள்

மாரியம்மன் கோயில் திருவிழாவில் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் சுவாமி வேடமிட்டு அசத்திய குழந்தைகள்

மாரியம்மன் கோயில் திருவிழாவில் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் சுவாமி வேடமிட்டு அசத்திய குழந்தைகள்


ADDED : நவ 07, 2025 05:57 AM

Google News

ADDED : நவ 07, 2025 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: க. புதுப்பட்டியில் மாரியம்மன் கோயில் திருவிழாவில் மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் வேண்டுதலை நிறை வேற்றினர்.

மாரியம்மன் கோயில் திருவிழா புதுப்பட்டி,அனுமந்தன்பட்டி கிராமங்களில் கொண்டாடப்படுகிறது. பால் வியாபாரி தடுக்கி விழுந்த இடத்தில் சுயம்புவாக அம்மன் இருந்ததால், இந்த திருவிழாவை இரு கிராமங்கள் கொண்டாடுகின்றன. பால் வியாபாரி அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர். கிடைத்த இடம் புதுப்பட்டி. எனவே, இரு ஊர்களிலும் கோயில் கட்டி ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கொண்டாடுகின்றனர். முந்தைய வாரம் அனுமந்தன்பட்டியில் திருவிழா முடிந்தபின், நவ. முதல் தேதி புதுப்பட்டிக்கு அம்மன் கொண்டுவரப்பட்டது. அன்று முதல் நேற்று முன்தினம் வரை ஒருவாரம் திருவிழா நடைபெற்றது.

மஞ்சள் நீராட்டம், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், அக்னிசட்டி எடுத்தும், வண்டி வேஷம், முளைப்பாரி ஊர்வலம் எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன்களை நிறைவேற்றினர். ஒவ்வொரு நாளும் விதவிதமான அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிவபெருமான், பெருமாள், விநாயகர், முருகப்பெருமான் மற்றும் அம்மன் வேடமணிந்த சிறுவர்கள் வந்தனர். கலைக்குழு பெண்களின் கும்மிப்பாட்டு, கோலாட்டம் கலை நிகழ்ச்சிகள் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. திருவிழா முடிந்து அம்மன் அனுமந்தன்பட்டிக்கு புறப்பட்டு சென்றது.






      Dinamalar
      Follow us