/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குழந்தைகள் தின விழிப்புணர்வு ஊர்வலம்
/
குழந்தைகள் தின விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : நவ 15, 2024 05:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் தேனி பழைய ஜி.எச்., முதல் அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் வரை நடந்தது.
கலெக்டர் ஷஜீவனா ஊர்வலத்திற்கு தலைமை வகித்தார். மாணவர்கள், தன்னார்வலர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஊர்வலத்தில் பங்கேற்றனர். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சந்தியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு தலைவர் வனஜா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளாதேவி, தாசில்தார் சதீஸ்குமார், இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.