sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சித்திரை திருவிழா: 22 தற்காலிக உண்டியல்கள் வைக்க ஏற்பாடு

/

சித்திரை திருவிழா: 22 தற்காலிக உண்டியல்கள் வைக்க ஏற்பாடு

சித்திரை திருவிழா: 22 தற்காலிக உண்டியல்கள் வைக்க ஏற்பாடு

சித்திரை திருவிழா: 22 தற்காலிக உண்டியல்கள் வைக்க ஏற்பாடு


ADDED : ஏப் 28, 2025 06:42 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: ''வீரபாண்டி சித்திரை திருவிழாவிற்காக 22 தற்காலிக உண்டியல்கள் வைக்க ஏற்பாடு நடந்து வருகின்றன.'' என, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் தெரிவித்தனர்.

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா மே 6 முதல் மே 13 வரை நடக்க உள்ளது.

கம்பம் நடும் நிகழ்வு முடிந்துள்ளதால் தினமும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

இந்நிலையில் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 12 இடங்களில் நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மேலும் 22 தற்காலிக உண்டியல்கள் கோயில் வளாகத்தில் வைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், 'கோயில் பிரகாரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக குச்சிகள் கட்டி தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

எனவே, அங்கப்பிரதட்சண வேண்டுதல் நிறைவேற்றும் பக்தர்கள் மே 3க்குள் கோயில் வளாகத்தில் அங்கபிரதட்சணம் செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us