sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பஸ் ஸ்டாண்டில் முடங்கிய துணிப்பை இயந்திரம்

/

பஸ் ஸ்டாண்டில் முடங்கிய துணிப்பை இயந்திரம்

பஸ் ஸ்டாண்டில் முடங்கிய துணிப்பை இயந்திரம்

பஸ் ஸ்டாண்டில் முடங்கிய துணிப்பை இயந்திரம்


ADDED : ஆக 18, 2025 06:14 AM

Google News

ADDED : ஆக 18, 2025 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி போடி பஸ் ஸ்டாண்டில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்ட துணிப்பை இயந்திரம் மின் இணைப்பு இன்றி முடங்கிய நிலையில் உள்ளது.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பல்வேறு இடங்களில் ரூ.10க்கு துணிப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டு உள்ளன. பாலிதீன், பிளாஸ்டிக் பை பயன் படுத்துவதற்கு பதிலாக போடி நகராட்சி மூலம் போடி பஸ் ஸ்டாண்டில் ரூ.10 செலுத்தி துணிப்பை பெறுவதற்காக தானியங்கி இயந்திரம் 2 ஆண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்டன. ஓராண்டுக்கு முன்பு வரை 700 துணிப்பை மட்டுமே வழங்கப்பட்டு உள்ளன. அதன் பின் மின் இணைப்பு இல்லாததால் இயந்திரம் செயல்பாடு இன்றி காட்சி பொருளாக உள்ளது. தற்போது ரூ.10 செலுத்தினால் துணிப்பை வருவது இல்லை. செலுத்திய ரூ.10 மட்டுமே வெளியே வருகிறது. மக்களிடமும் போதிய விழிப்புணர்வு இன்றி பாலிதீன் பயன்பாடு தாராளமாக உள்ளது. இதனை கண்காணிக்கும் நகராட்சி, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் கண்டு கொள்வது இல்லை. பாலிதீன், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்து, துணிப்பை இயந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர போடி நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us