sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

யானைகளால் தென்னை மரங்கள் சேதம்

/

யானைகளால் தென்னை மரங்கள் சேதம்

யானைகளால் தென்னை மரங்கள் சேதம்

யானைகளால் தென்னை மரங்கள் சேதம்


ADDED : ஜன 24, 2025 05:22 AM

Google News

ADDED : ஜன 24, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு: கடமலைக்கு அருகே கொம்புக்காரன் புலியூர் கிராமத்தை ஒட்டி உள்ள பாம்புச்சேரி மலையடிவாரத்தில் பல ஏக்கரில் தென்னை, முருங்கை விவசாயம் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இப்பகுதிக்கு வந்த காட்டு யானைகள் மலையடி வாரத்தில் உள்ள பாண்டி, சுதாகர், அண்ணாதுரை, மகேஸ்வரன், சின்னசென்றாயன் ஆகியோர்களின் தோட்டத்தில் தென்னை மரங்களை சேதப்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இதே பகுதிக்குள் இரவில் புகுந்த காட்டு யானைகள் மீண்டும் தென்னை மரங்களை சேதப்படுத்தி சென்றுள்ளது.

நேற்று முன்தினம் தாழையூத்து மலை அடிவாரத்தில் உள்ள சிமிசாஜி, பிரதீப், ஷாஜி ஜோஸ் ஆகியோர்களின் தோட்டத்திலும் 60 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், சொட்டு நீர் பாசன குழாய்களையும் சேதப்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் தோட்டங்களுக்கு செல்ல விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். விவசாயிகளுக்கும் தொடர்ந்து நஷ்டம் ஏற்படுகிறது. வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us