sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இல்லாத திட்டங்களை கூறி பொதுமக்களிடம் கட்டணம் வசூல் - கூடலுார் போலீசில் பா.ஜ.,வினர் புகார்

/

இல்லாத திட்டங்களை கூறி பொதுமக்களிடம் கட்டணம் வசூல் - கூடலுார் போலீசில் பா.ஜ.,வினர் புகார்

இல்லாத திட்டங்களை கூறி பொதுமக்களிடம் கட்டணம் வசூல் - கூடலுார் போலீசில் பா.ஜ.,வினர் புகார்

இல்லாத திட்டங்களை கூறி பொதுமக்களிடம் கட்டணம் வசூல் - கூடலுார் போலீசில் பா.ஜ.,வினர் புகார்


ADDED : நவ 15, 2024 05:33 AM

Google News

ADDED : நவ 15, 2024 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: இல்லாத திட்டங்களை மோடியின் பெயரைக் கூறி பொது மக்களிடம் கட்டணம் வசூல் செய்த கரூரைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கூடலுார் பா.ஜ.,வினர் போலீசில் புகார் செய்தனர்.

கூடலுார் பா.ஜ., நகரத் தலைவர் முருகேசன் நிர்வாகிகளுடன் சென்று வடக்கு போலீசில் கொடுத்த புகார் மனுவில்:

கரூரைச் சேர்ந்த காமராஜ் உள்ளிட்ட 25 பேர்கள் கூடலுார் புதிய வாரச்சந்தை கட்டடத்தில் பொது மக்களை அழைத்து பல்வேறு திட்டங்களில் பணம் பெற்று தருவதாக பேசினர்.

இதில் வீடு இல்லாதவர்களுக்கு 2 சென்ட் காலி இடம் கொடுப்பது, விதவைகளுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்குவது உள்ளிட்ட திட்டங்கள் பிரதமர் மோடியின் பெயரில் இருப்பதாகக் கூறி பொது மக்களிடம் தலா ரூ.150 வீதம் கட்டணமாக வசூல் செய்தனர்.

பிரதமர் மோடியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், இல்லாத திட்டங்களை கூறி பொது மக்களிடம் கட்டண வசூல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us