/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீச்சல் தெரியாத கல்லுாரி மாணவர் பலி
/
நீச்சல் தெரியாத கல்லுாரி மாணவர் பலி
ADDED : ஏப் 28, 2025 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: ஐதராபாத்தைச் சேர்ந்தவர் சர்வேஷ் 19. பெரியகுளம் பகுதி கல்லுாரியில் தங்கி முதலாமாண்டு படித்து வந்தார்.
விடுதியில் இருந்து, தனது நண்பர்களுடன் பெரியகுளம் பகுதிக்கு சென்றார். நஞ்சாவரம் பகுதியில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர். வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.