sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கோம்பை, பண்ணைப்புரம், தேவாரத்தில் பகிர்மான குழாய் புதுப்பிக்கும் பணி துவக்கம்

/

கோம்பை, பண்ணைப்புரம், தேவாரத்தில் பகிர்மான குழாய் புதுப்பிக்கும் பணி துவக்கம்

கோம்பை, பண்ணைப்புரம், தேவாரத்தில் பகிர்மான குழாய் புதுப்பிக்கும் பணி துவக்கம்

கோம்பை, பண்ணைப்புரம், தேவாரத்தில் பகிர்மான குழாய் புதுப்பிக்கும் பணி துவக்கம்


ADDED : அக் 29, 2024 05:42 AM

Google News

ADDED : அக் 29, 2024 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் பேரூராட்சிகளில் குடிநீர் திட்ட மெயின் பகிர்மான குழாய் புதுப்பிக்கும் பணிகள் துவங்கியது.

தேனி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் 50 க்கும் மேற்பட்ட திட்டங்கள் மூலம் வாரியம் குடிநீர் சப்ளை செய்து வருகிறது. லோயர்கேம்ப்பில் முல்லைப்பெரியாற்றில் பம்பிங் செய்து புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி , அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், ஓடைப்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், மார்க்கையன்கோட்டை, குச்சனூர் உள்ளிட்ட பேரூராட்சிகளுக்கும், ஊராட்சிகளுக்கும் வினியோகம் செய்து வருகிறது.

லோயர்கேம்ப்பிலிருந்து கூடலூர் , கம்பம் வழியாக கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் பேரூராட்சிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யும் கேபிடி திட்டம் 30 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. இந்த சிமென்ட் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் சப்ளை பிரச்னை ஏற்பட்டது. எனவே சிமென்ட் குழாய்களை மாற்றி இரும்பு குழாய்கள் பதித்து குடிநீர் கொண்டு வர மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.

கம்பத்திலிருந்து தேவாரம் வரை 24 கி.மீ. தூர மெயின் பகிர் குழாயை புதுப்பிக்க வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கென நபார்டு வங்கி ரூ.19.89 கோடி வழங்கியது. இத் திட்டத்தில் லோயர்கேம்ப் முதல் கம்பம் வரை பகிர்மான குழாய்கள் நல்ல நிலையில் இருப்பதால்,எந்த மாற்றமும் செய்யவில்லை. கம்பத்திலிருந்து தேவாரம் வரை மட்டுமே பகிர்மான குழாய் புதுப்பிக்கப்படுவதாக வாரியம் தெரிவித்துள்ளது.

கம்பம் ஊத்துக்காடு என்ற இடத்திலிருந்து கோம்பை ரோடு வழியாக குழாய் பதிக்கும் பணிகள் துவங்கியது. பணிகள் முடிந்தவுடன் மூன்று பேரூராட்சிகளுக்கும் தேவையான அளவு குடிநீர் கிடைக்கும் .

இதுவரை நாள் ஒன்றுக்கு 17 லட்சம் லிட்டர் வழங்கப்பட்டது. இந்த பணிகள் முடிந்த பின் நாள் ஒன்றுக்கு 36 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us