sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேனியில்  தரமின்றி  பாதாள சாக்கடை பணிகள்   நடப்பதாக கவுன்சிலர்கள் புகார்

/

தேனியில்  தரமின்றி  பாதாள சாக்கடை பணிகள்   நடப்பதாக கவுன்சிலர்கள் புகார்

தேனியில்  தரமின்றி  பாதாள சாக்கடை பணிகள்   நடப்பதாக கவுன்சிலர்கள் புகார்

தேனியில்  தரமின்றி  பாதாள சாக்கடை பணிகள்   நடப்பதாக கவுன்சிலர்கள் புகார்


ADDED : ஆக 12, 2025 05:57 AM

Google News

ADDED : ஆக 12, 2025 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி நகராட்சி கூட்டத்தில்பாதாளசாக்கடை பணி தரமின்றி நடப்பதாக ஒப்பந்த நிறுவன அலுவலர்களிடம் நகராட்சி தலைவர், கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.

தேனி அல்லி நகரம் நகராட்சி கூட்டம் தலைவர் ரேணுப்பிரியா (தி.மு.க.) தலைமையில் நடந்தது. கமிஷனர் சங்கர், துணைத்தலைவர் செல்வம் முன்னிலை வகித்தனர்.

பொறியாளர் குணசேகரன், மேலாளர் வெங்கடாஜலபதி, நகர்நல அலுவலர் கவிப்பிரியா பங்கேற்றனர். கவுன்சிலர்கள் பேசியதவது:

மணிகண்டன் (தி.மு.க.): புது பஸ் ஸ்டாண்டில் ரூ.1.82 கோடியில் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ள நிலையில் இலவச கழிப்பறை அகற்றி எதற்காக ரூ.4.5 லட்சம் செலவில் புதிய கழிப்பறை அமைக்க வேண்டும். அந்த தீர்மானத்தை நிறுத்த வேண்டும். ஏற்கனவே நிறுத்தப்பட்ட பல தீர்மானங்கள் செயல்படுத்தி நிதி விணாகிறது.

கடந்தாண்டு 9வது வார்டில் பேவர் பிளாக் ரோடு சீரமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இதுவரை பணிகள் நடக்கவில்லை.

நகராட்சி துணைத்தலைவர் : நகர்பகுதியில் நடந்து வரும் பாதாள சாக்கடை பணி தரமின்றி நடக்கிறது. விதிமுறைகள், அளவீடுகள் பின்பற்றாமல் அமைக்கின்றனர்.தரமற்ற கலவை பயன்படுத்துகின்றனர்.

தலைவர்: ஆய்வின் போது பல இடங்களில் பாதாள சாக்கடை மூடியில் பூச்சு பணி மேற்கொள்ளாமல் நடந்துள்ளது.

பாதாள சாக்கடை ஒப்பந்ததாரர்கள் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் பணி செய்கின்றனர்.

கவுன்சிலர்கள்: பழைய பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு வழங்கசிமென்ட் பைப் பயன்படுத்தினர்.

ஆனால், தற்போது பிளாஸ்டிக் பைப் பயன் படுத்துகின்றனர்.

கவுன்சிலர்கள் நாக ராஜன், கிருஷ்ணபிரபா, பாலமுருகன்: தனியார் நிறுவனம் நகரில் சுகாதர பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை அந்திறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

லதா: மதுரை ரோட்டில் கட்டட அனுமதி பெறாமல் பணிகள் நடந்து வருகிறது.

சலீம், நகரமைப்பு ஆய்வாளர்: அனுமதி பெறாமல் நடக்கும் கட்டட பணிகள் மேற்கொள்ளும் 5 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் 60க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us