/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நிலத்தில் 'தகரசெட்' அமைத்து ஆக்கிரமிப்பு; தேனி இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவு
/
நிலத்தில் 'தகரசெட்' அமைத்து ஆக்கிரமிப்பு; தேனி இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவு
நிலத்தில் 'தகரசெட்' அமைத்து ஆக்கிரமிப்பு; தேனி இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவு
நிலத்தில் 'தகரசெட்' அமைத்து ஆக்கிரமிப்பு; தேனி இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜன 14, 2025 11:00 PM
தேனி; தேனி சிவாஜிநகரில் உள்ள 21 சென்ட் நிலத்தில் அத்துமீறி நுழைந்து தகரசெட் அமைத்து ஆக்கிரமித்த மூவர் மீது, தேனி டவுன் இன்ஸ்பெக்டர் மூன்று மாதங்களில் நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் .' என, தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை அண்ணாநகர் 16வது குறுக்குத் தெரு ஈஸ்வரன் 75. இவர்களது மகன்கள் மகேஸ்வரன், சதீஷ்குமார்.
இம்மூவருக்கும் தேனி அல்லிநகரம் நகராட்சி சிவாஜிநகரில் 21 சென்ட் நிலம் உத்தமபாளையம் சார்பு நீதிமன்றம் உத்தரவில், ஈஸ்வரனின் மனைவி வழி மூத்தோர் சார்பில், பாகம் பிரித்து ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் அந்நிலத்தில் வருஷநாடு ஜெயச்சந்திரன், தவமணி, மாடசாமி, மனோகரன் ஆகியோர் இணைந்து, ஈஸ்வரனுக்கு சொந்தமான நிலத்தில் அத்துமீறி நுழைந்து,ஆக்கிரமித்து தகரவேலி அமைத்துள்ளனர்.
இதனால் நிலத்தின் உரிமையாளர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதில் உயர்நீதிமன்றம், மனுதாரர் ஈஸ்வரன் மனுவை விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்தது. அதனடிப்படையில் தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயமணி, ஈஸ்வரனுக்கு சொந்தமான 21 சென்ட் இடத்தில் தகரசெட் அமைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு உள்ளதா என ஆய்வு செய்து, 3 மாத காலத்திற்குள் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு இந்த நடவடிக்கை குறித்து அவ்வப்போது நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, தீர்ப்பளித்துள்ளார்.