sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கோடை காலம் துவங்கும் முன் வெள்ளரி, தர்பூசணி வரத்து

/

கோடை காலம் துவங்கும் முன் வெள்ளரி, தர்பூசணி வரத்து

கோடை காலம் துவங்கும் முன் வெள்ளரி, தர்பூசணி வரத்து

கோடை காலம் துவங்கும் முன் வெள்ளரி, தர்பூசணி வரத்து


ADDED : பிப் 07, 2025 05:12 AM

Google News

ADDED : பிப் 07, 2025 05:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : தேனி மாவட்டத்தில் கோடை காலம் துவங்கும் முன்பே வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் வெயிலை சமாளிக்க வெள்ளரிக்காய், தர்பூசணி விற்பனைக்கு வந்துள்ளன.

மாவட்டத்தில் இரவில் தொடரும் பனி காலை 8:00 மணி நீடிக்கிறது. காலை 9:00 மணி முதல் மாலை 4:00 வரை வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இதனால் வெயில் தாக்கத்தை சமாளிக்க பகலில் பழவகைகள், ஜுஸ் விற்பனை துவங்கியுள்ளது. பெரியகுளத்தில் இரு நாட்களாக வெள்ளரிக்காய் விற்பனைக்கு வந்துள்ளது. கிலோ வெள்ளரிக்காய் ரூ.100 க்கு விற்பனையாகிறது.

வெள்ளரிக்காயில் நீர் சத்து அதிகமுள்ளது. உடல் சூட்டை குறைக்கும். இதில் வைட்டமின் பி. சி. கே. மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. கொழும்பு செல்களை கரைத்து உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. இதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.

இதனால் பலரும் விரும்பி வாங்கி செல்கின்றனர். தேனி, ஆண்டிபட்டி பகுதியில் தர்பூசணி விற்பனைக்கு குவித்துள்ளனர். உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி கிலோ ரூ. 25க்கு விற்பனை செய்யப் படுகிறது.

வெள்ளரிக்காய் வியாபாரி பாண்டியன் கூறுகையில்: கெங்குவார்பட்டி மத்துவார் கண்மாய் ஓரங்களிலும், அதனை ஒட்டிய நிலங்களில் வெள்ளரி சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. கிலோ ரூ.80 க்கு வாங்கி ரூ.100 க்கு விற்கிறோம். மார்ச்சில் வரத்து அதிகரிக்கும் போது வெள்ளரிக்காய் விலை குறையும் என்றார்.






      Dinamalar
      Follow us