/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இயற்கை உரத்திற்காக தக்கைப் பூண்டு சாகுபடி
/
இயற்கை உரத்திற்காக தக்கைப் பூண்டு சாகுபடி
ADDED : ஜன 17, 2025 05:42 AM
போடி: விளை நிலங்களின் மண்ணின் தன்மையை வளப்படுத்தும் வகையில் செயற்கை உரங்களை பயன்படுத்திய விவசாயிகள் மீண்டும் இயற்கை உரங்களுக்கு மாறி வருகின்றனர். போடி அணைக்கரைப்பட்டி, சடையால்பட்டி, காமராஜபுரம் உள்ளிட்ட பகுதியில் இயற்கை உரத்திற்காக தக்கைப் பூண்டு சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர்.
செடிகள் இரண்டு மாதங்களில் நன்கு வளர்ந்த நிலையில் அதே நிலத்தில் செடிகளை உழுது உரமாக பயன்படுத்தி வருகின்றனர். சூரிய ஒளி மூலம் செடிகளின் வேருக்கு நைட்ரஜன், புரோட்டின் சத்தும் கிடைத்து வருகிறது. மண்ணின் தன்மை மாறாமல் மண் புழுக்கள் இறக்காமல் உரமாகவும், தளைசத்தாகவும், கால்நடைகளுக்கு நல்ல சத்தான தீவனமாக பயன்படுகிறது. இதனால் விவசாயிகள் தற்போது தக்கைப் பூண்டு செடிகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.