sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான பள்ளங்கள்

/

தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான பள்ளங்கள்

தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான பள்ளங்கள்

தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான பள்ளங்கள்


ADDED : அக் 14, 2025 04:27 AM

Google News

ADDED : அக் 14, 2025 04:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனியில் மேம்பால பணிகள் நடைபெறும் பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான பள்ளங்கள் உள்ளன. இரவில் போதிய வெளிச்சமில்லாததால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகுகின்றனர்.

தேனியில் மதுரை ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. மதுரை ரோட்டில் சிப்காட் பகுதியில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேம்பால பணிகள் துவங்கும் தனியார் பள்ளி அருகில் இருந்து, தேனி பகுதியில் தனியார் மருத்துவமனை வரை இரவில் போதிய விளக்குகள் இன்றி வாகன ஓட்டிகள், பாதசாரிகள் இரவில் அவதியடைகின்றனர்.

இது தவிர தொழிற்பேட்டை அருகே மேம்பாலத்திற்கு தெற்கு பகுதியில் அமைந்துள்ள சர்வீஸ் ரோட்டோரத்தில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் பெரிய பள்ளங்கள் உள்ளன. வாகனங்கள் விபத்தில் சிக்கும் வகையில் இவை உள்ளன. இது தவிர தண்டவாளங்கள் அருகே இந்த சர்வீஸ் ரோடு அமைந்தள்ளது. விபத்துக்களை தவிர்க்க பள்ளங்களை மூடி, தடுப்புகள் வைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us