ADDED : பிப் 06, 2025 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி; தேவதானப்பட்டி அருகே சாத்தாகோவில்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தினேஷ் பாண்டி 23. சாத்தாகோவில்பட்டி முத்தாலம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்தார்.
தேவதானப்பட்டி மன்சூர் அலிகான் 25. மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 4 பேர் முன் விரோதம் காரணமாக தினேஷ்பாண்டியை தாக்கினர்.
மன்சூர் அலிகான் அரிவாளைகாட்டி கொலை மிரட்டல் விடுத்தார். தேவதானப்பட்டி போலீசார் மன்சூர் அலிகான் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.-