sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மணல் கடத்தலில் பறிமுதல் செய்த வாகனங்களை ஏலம் விட வலியுறுத்தல்

/

மணல் கடத்தலில் பறிமுதல் செய்த வாகனங்களை ஏலம் விட வலியுறுத்தல்

மணல் கடத்தலில் பறிமுதல் செய்த வாகனங்களை ஏலம் விட வலியுறுத்தல்

மணல் கடத்தலில் பறிமுதல் செய்த வாகனங்களை ஏலம் விட வலியுறுத்தல்


ADDED : ஜூன் 30, 2025 04:53 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 04:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி : போடி பகுதியில் மணல் கடத்தலுக்கு பயன் படுத்திய டூவீலர்களை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்து 7 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் தாலுகா அலுவலகத்தில் காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டு உள்ளன.

போடி கொட்டகுடி ஆறு அணைப் பிள்ளையார் அணைப் பகுதியில் 7 ஆண்டுகளுக்கு முன் இரவு, பகல் பாராமல் மணல் கடத்தல் நடந்து வந்தது. இதனால் அணைப்பகுதி அரிப்பு ஏற்பட்டு இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. இதனை ஒட்டி மணல் அள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. இதனால் மாட்டு வண்டிகள், டிராக்டர்களில் மணல் கடத்தல் நிறுத்தப்பட்டன.

இதற்கு பதிலாக பிளாஸ்டிக் பைகளில் மணல் அள்ளி டூவீலர்களிலும், நம்பர் இல்லாத டூவீலர்களிலும் மணல் கடத்தி வந்தனர்.

அதிகாரிகள் வருவதை அறிந்தால் எஸ்கேப் ஆவதற்கு டூவீலரை பயன்படுத்தி வந்தனர். இதனால் பலர் டூவீலரை போட்டு விட்டு தப்பினர். இது போன்ற செயல்களால் 50 க்கும் மேற்பட்ட டூவீலர்களை வருவாய் துறையினர் கைப்பற்றி தாலுகா அலுவலக அறையில் வைத்துள்ளனர்.

டூவீலர்களை கைப்பற்றி 7 ஆண்டுகளுக்கு மேலாகியும் உரியவர்களிடம் அபராதம் வசூலித்து ஒப்படைக்காமலும், ஏலம் விடாமல் இருப்பதாலும் பயன் பாடின்றி துருப்பிடித்து வீணாகிறது.

அரசுக்கு வருமானம் கிடைக்கும் வகையில் கைப்பற்றப்பட்ட டூவீலர்களை ஏலம் விட வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us