ADDED : ஜன 09, 2024 05:45 AM

அ நிறம் | அளவு
தேனி,: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே இந்திய கம்யூ., கட்சியின் தேனி தாலுகா குழு சார்பில், மத்திய அரசு, தமிழக அரசு கோரிய நிவாரண நிதியை வழங்காததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா செயலாளர் அரசகுமாரன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் கர்ணன், பொருளாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தனலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள்பங்கேற்றனர்.
