ADDED : அக் 06, 2025 04:45 AM
அ நிறம் | அளவு
தேனி : பழனிசெட்டிபட்டி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் தமிழ்நாடு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், 'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வு நாளில் பணப்பலன் வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். நிர்வாகி சங்கரசுப்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
