sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கோயில்களில் ஆடிப்பூர திருவிழா கோலாகலம் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி தரிசித்த பக்தர்கள்

/

கோயில்களில் ஆடிப்பூர திருவிழா கோலாகலம் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி தரிசித்த பக்தர்கள்

கோயில்களில் ஆடிப்பூர திருவிழா கோலாகலம் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி தரிசித்த பக்தர்கள்

கோயில்களில் ஆடிப்பூர திருவிழா கோலாகலம் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி தரிசித்த பக்தர்கள்


ADDED : ஜூலை 29, 2025 01:10 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம்: ஆடிப்பூரத் திரு விழாவை முன்னிட்டு கோயில்களில் அம்மனுக்கு வளையல் அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

உத்தமபாளையம் யோக நரசிங்க பெருமாள் கோயிலில் ஆடிப்பூரம் திருவிழா கொண்டாடப்பட்டது

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் ஆண்டாள் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்த நாளில் ஆடிப்பூரத் திருவிழா கொண்டாடப் படுகிறது.

உத்தமபாளையம் யோக நரசிங்க பெருமாள் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள ஆண்டாள் நாச்சியாருக்கு நவகலச திருமஞ்சனம், திரவிய அபிஷேகம், புஸ்பாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாள் நாச்சியாரை தரிசித்தனர்.

ஆடிப்பூரம் திருவிழா உபயதாரராக இருந்து பழனிவேல்ராஜன், நிர்மலா குடும்பத்தினர் நடத்தினர். ஓம் நமோ நாராயணா பக்த சபையினர் மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறையினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானம்பிகை கோயிலில் ஆடிப்பூரம் திருவிழா கொண்டாடப்பட்டது. அம்பாளுக்கு வளைகாப்பு உற்ஸவம் என்பதால் பக்தர்கள் கொடுத்த வளையல்கள் ஆண்டாள் நாச்சியாருக்கு அணிவிக்கப்பட்டு வளையல அலங்காரத்தில் எழுந்தருளினார்.

ஆண்டிபட்டி: சக்கம்பட்டி நன்மை தருவார் கோயில் வளாகத்தில் உள்ள 49 அடி உயர மாகாளியம்மன் ஆடிப்பூர விழா நடந்தது.

விழாவில் மகாளியம்மன், ஆதிபராசக்தி அம்மனுக்கு வளையல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் வளாகத்தில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு வளையல், குங்குமம், மஞ்சள், மாங்கல்யம் பிரசாதமாக வழங்கப்பட்டது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் முத்து வன்னியன் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

போடி: - போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் ஆடிப்பூரம் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார்.

வளையல் அலங்காரத்தில் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.

சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வ கந்த குருக்கள் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மீனாட்சி அம்மனின் தரிசனம் பெற்றனர்.

பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயில் அறம் வளர்த்த நாயகி அம்மன், கவுமாரியம்மன், கம்பம் ரோடு காளியம்மன், வடகரை பள்ளத்து காளியம்மன், திரவுபதி அம்மன் கோயில்களில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.

அம்மன் வளையல்கள் அலங்காரத்தில் காட்சியளித்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us