sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் காப்பு கட்டி விரதம் துவக்கிய பக்தர்கள்

/

மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் காப்பு கட்டி விரதம் துவக்கிய பக்தர்கள்

மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் காப்பு கட்டி விரதம் துவக்கிய பக்தர்கள்

மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் காப்பு கட்டி விரதம் துவக்கிய பக்தர்கள்


ADDED : பிப் 19, 2024 05:20 AM

Google News

ADDED : பிப் 19, 2024 05:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் திருவிழா காலங்களில் கரும்பில் தொட்டில்கட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் ஏராளமான பக்தர்கள் கையில் காப்பு கட்டிக் கொண்டு விரதத்தை துவக்கினர்.

தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ., தூரம் மஞ்சளாற்றின் கரையோரம் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அம்மனுக்கு விக்ரஹம் கிடையாது. மூடப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. இக்கோயிலின் மாசி மகாசிவராத்திரி திருவிழா மார்ச் 8 ல் துவங்குவதை முன்னிட்டு நேற்று ஏராளமானோர் கையில் காப்பு கட்டி தங்களது நேர்த்தி கடனுக்கான விரதத்தை துவக்கினர். கோயில் திருவிழா காலங்களில் தீச்சட்டி, பால்குடம், கணவன், மனைவி தம்பதிகள் சகிதமாக தங்களுக்கு குழந்தை வரம் கொடுத்த காமாட்சியம்மனுக்கு கரும்பில் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்துவர். இவர்கள் 25 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை விரதம் மேற்கொள்வர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் கையில் காப்பு கட்டிக்கொண்டனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us