
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் அருகே சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.6750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் நுார்ஜஹான், நிர்வாகிகள் அன்பழகன், சுப்புராஜ், பாலகிருஷ்ணன்,சுமதி, ராதிகா, தேன்மொழி,தங்கமீனாஉள்ளிட்டோர் பங்கேற்றனர்.

