ADDED : ஜன 07, 2024 07:11 AM
அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே எருமலைநாயக்கன்பட்டி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் கருதப்பாண்டி 28.
இதே ஊரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் தங்கவேலுடன், தர்மலிங்கபுரத்தில் முருகன் என்பவர் வீட்டில் எலக்ட்ரீசியன் வேலை செய்யும் போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி கருதப்பாண்டி மயங்கினார். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர் கருதப்பாண்டி இறந்துவிட்டதாக தெரிவித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
--
